இலங்கை பிரதான செய்திகள்

நல்லிணக்க செயற்பாடுகளுக்கு நோர்வேயின் ஆதரவுக்கு ரணில் நன்றி கூறினார்!

இலங்கையின் சமாதானம் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு நோர்வே நாடு வழங்கி வரும் ஆதரவுகளுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நன்றி தெரிவித்துள்ளார். ஒஸ்லோவில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நோர்வேப் பிரதமருடனான கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பிரதமர் இவ்வாறு நன்றி தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையில் அரசியல், பொருளாதாரம், நல்லிணக்கம் போன்றவற்றின் முன்னேற்றம், மீள்குடியேற்றம், மனித உரிமைகளை வலுப்படுத்தியுள்ளமை, ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்தியுள்ளமை குறித்து நோர்வே அரசாங்கத்திற்கு தாங்கள் தெளிவுப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

இலங்கையின் சமாதானம் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு நோர்வே வழங்கி வரும் ஆதரவுக்கு நன்றிகளை தெரிவித்த பிரதமர், நோர்வேயில் உள்ள புலம்பெயர்ந்த இலங்கையர்கள் நோர்வேயின் பொருளாதாரம் மற்றும் சமூகத்திற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

உலகின் தற்போதைய அபிவிருத்தி தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தவுள்ளதாகவும் இதற்காக நெருக்கமான இணைந்து செயற்பட உள்ளதாகவும பிரதமர் மேலும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.