Home இலங்கை நெல்லுமணி வெற்றிக்கிண்ண இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது செந்தமிழ் அணி

நெல்லுமணி வெற்றிக்கிண்ண இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது செந்தமிழ் அணி

by admin

முரசுமோட்டை விளைபூமி விளையாட்டுக்கழகம் இறந்தவர்கள் ஞாபகார்த்தமாக நடாத்தும் நெல்லுமணிகள் வெற்றிக்கிண்ணத்திற்கான உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி கடந்த 5.10.2018 இல் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றுவருகின்றது.  இப்போட்டியில் 30 மேற்பட்ட கிளிநொச்சி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அணிகளும் யாழ்ப்பாணம் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வடமராச்சி அணிகளும் பங்குகொண்டன.

நேற்று (09.10.2018) இரவு மின்னொளியில் நடைபெற்ற அரை இறுதிப்போட்டியில் வடமராச்சி உடுத்துறை செந்தமிழ் அணியும் பூநகரி கிராஞ்சி கிராஞ்சி செல்சிட்டி அணியும் போட்டியிட்டன. இப்போட்டியில் செந்தமிழ் அணியை சேர்ந்த யூட் இரண்டு கோல்கள் போட்டு இறுதிப்போட்டிக்குள் அழைத்து சென்றார்.

இந்தநிலையில் நாளைய அரையிறுதிப்போட்டியில் வலைப்பாடு ஜெகமீட்பர் அணியும் புநகரி கலைமகள் அணியூம் மோதவுள்ளன. இறுதிப்போட்டி எதிர்வரும் (13.10.2018)ம்திகதி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இதைவிட சிறப்பு உதைபந்தாட்ட போட்டியாக 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான போட்டியம் இங்கு நடைபெறகின்றது விசேட அம்சமாகும்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More