Home இலங்கை 140 மில்லியன் ரூபாய் இழப்பு – இலங்கை போக்குவரத்துச் சபையின் மனுவுக்கு, பதில் வழங்க மகிந்தவுக்கு உத்தரவு..

140 மில்லியன் ரூபாய் இழப்பு – இலங்கை போக்குவரத்துச் சபையின் மனுவுக்கு, பதில் வழங்க மகிந்தவுக்கு உத்தரவு..

by admin


140 மில்லியன் ரூபாய் நட்டத்தை மீளப் பெற்றுக் கொடுக்குமாறு கோரி இலங்கை போக்குவரத்துச் சபையால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி 06ம் திகதி பதில் வழங்குவதற்கு கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு இன்று (10.10.18) வணிக மேல் நீதிமன்ற நீதிபதி ஆர். குருசிங்க முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தேர்தல் பணிகளுக்காக இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்துகளை பயன்படுத்தியதன் மூலம் ஏற்பட்ட நட்டத்தை மீளப் பெற்றுக் கொள்வதற்காக இலங்கை போக்குவரத்துச் சபையால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்துகளை தேர்தல் பணிகளுக்காக பயன்படுத்தியதன் மூலம் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு 140 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக மனுதாரர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More