Home இலங்கை யாழில் இன்று முன்னெடுக்கப்பட்ட காவல்துறை சுற்றுக்காவல் நடவடிக்கையில் 41 பேர் கைது

யாழில் இன்று முன்னெடுக்கப்பட்ட காவல்துறை சுற்றுக்காவல் நடவடிக்கையில் 41 பேர் கைது

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ்ப்பாணத்தில் 4 காவல்துறைப் பிரிவுகளில் இன்று (14) ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்ட காவல்துறை சுற்றுக்காவல் நடவடிக்கையில் 41 பேர் கைது செய்யப்பட்டனர் எனவும், 151 பேருக்கு எதிராக வீதிப் போக்குவரத்து விதி மீறல்களுக்காக சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம், மானிப்பாய், சுன்னாகம் மற்றும் கோப்பாய் காவல்துறை பிரிவுகளில் இன்று மாலை சுற்றுக்காவல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பிராந்திய சிரேஸ்ட காவல்துறை கண்காணிப்பாளர் ( அத்தியட்சகர்) தலைமையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கடந்த 9ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம், மானி்ப்பாய் மற்றும் சுன்னாகம் காவல்துறை பிரிவுகளில் காவல்துறை சுற்றுக்காவல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.இந்த நிலையில்  இன்று கோப்பாய் காவல்துறை பிரிவையும் இணைத்து 4 காவல்துறை   பிரிவுகளில் இந்தச் சுற்றுக்காவல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

‘வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபடுவோர் மற்றும் நீதிமன்றங்களால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தேடப்படுபவர்களை இலக்காக வைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதில் காவல்துறையினரால் தேடப்பட்டவர்கள் 7 பேர், நீதிமன்றங்களால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் 7 பேர், வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் 10 பேர் என 41 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் வீதிப் போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்கள் என்ற குற்றச்சாட்டில் 151 பேருக்கு எதிராக சட்டநடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது’ என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More