Home உலகம் அமெரிக்க இரட்டைக்கோபுர தாக்குதலுடன் தொடர்புடையவரின் நண்பர் நாடுகடத்தப்படவுள்ளார்

அமெரிக்க இரட்டைக்கோபுர தாக்குதலுடன் தொடர்புடையவரின் நண்பர் நாடுகடத்தப்படவுள்ளார்

by admin

கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி நடைபெற்ற அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலில் தொடர்புடையவரின் நண்பரை சிறையிலிருந்து விடுதலை செய்துள்ள ஜேர்மனி அவரை நாடு கடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மொரோக்கோவை சேர்ந்த மவுனி அல்-மொசாஸாடெக் என்பவர் குறித்த இரட்டை கோபுர தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட விமானத்தில் இருந்த பயணிகளின் உயிரிழப்பதற்கு காரணமாக இருந்த குற்றச்சாட்டிற்காக சுமார் 15 ஆண்டுகளை சிறையில் கழித்துள்ளார்.

தனது தண்டனை காலத்தில் பெரும்பகுதியை அனுபவித்துவிட்ட இவர் தற்போது மொரோக்கோவிற்கு நாடு கடத்தப்படவுள்ளார்.

தனக்கும், இரட்டை கோபுர தாக்குதல் சம்பவத்துக்கும் தொடர்பில்லை என மொசாஸாடெக் தொடர்ந்து கூறி வந்தாலும், இந்த தாக்குதலை நடத்தியவர்களின் நண்பராக இவர் இருந்தார் என குற்றம்சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More