Home இலங்கை யாழில் ஆலயங்கள் , வீடுகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கொள்ளையர்கள் கைது…

யாழில் ஆலயங்கள் , வீடுகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கொள்ளையர்கள் கைது…

by admin


யாழ்.திருநெல்வேலி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளிலும் தொடர்ச்சியாக ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்களை நேற்று மாலை மடக்கி பிடித்த இளைஞர்கள், நையபுடைத்ததாக காவற்துறையினர் தெரிவித்தனர். குறிப்பாக திருநெல்வேலி பகுதியில் 2 ஆலயங்களிலும் 3 வீடுகளில் கடந்த இரு நாட்களில் 4 பேர் கொண்ட கொள்ளை கும்பல் கொள்ளையில் ஈடுபட்டு வந்தது.

குறித்த கொள்ளைகளில் ஈடுபட்ட கொள்ளையர்களின் தெளிவான அடையாளங்களுடன் கூடிய சீ.சீ.ரி.வி ஆதாரங்கள் மீட்கப்பட்டிருந்தன.  இதனடிப்படையில் இந்தக் கொள்ளையர்களை பிடிப்பதற்காக இளைஞர்கள் திட்டமிட்டிருந்த நிலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் 4 பேர் நேற்று மாலை நடமாடியுள்ளனர். அவர்களை   மறித்த இளைஞர்கள் விசாரித்ததுடன் அவர்களிடம் இருந்த பையை சோதனையிட்டபோது கோவிலில் மீட்கப்பட்ட பித்தளை பொருட்கள் மீட்கப்பட்டன. பின்னர் கொள்ளை சம்பவம் தொடர்பான சீ.சீ.ரி.வி காட்சிகளை பார்த்த போது, பிடிபட்டவர்களே கொள்ளையர்கள் என அடையாளம் கண்டதை தொடர்ந்து கொள்ளையர்களை இளைஞர்கள் பிடித்து கட்டுவதற்கு முயற்சித்தபோது இருவர் தப்பி ஓடியுள்ளனர். எனினும் இருவர் அகப்பட்டனர். அவர்கள் இருவரையும் நையபுடைத்த இளைஞர்கள் அவர்களை மின் கம்பத்துடன் கட்டிவைத்தனர்.

பின்னர் காவற்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு சென்ற காவற்துறையினர் இந்தக் கொள்ளையர்களை தாம் இதற்கு முன்னரும் கைது செய்ததாகவும் இவர்கள் பிணையில் வெளிவந்து வந்து மீண்டும் மீண்டும் கொள்ளையில் ஈடுபடுவதாகவும் கூறி இருவரையும் கைது செய்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More