Home இந்தியா இலங்கைச் சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம்

இலங்கைச் சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம்

by admin

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மீனவர்கள் 8 பேரை விடுவிக்க இந்திய வெளியுறவுத் துறை அமைச்சு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்திய பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இலங்கை கடற்படையினரால் கடந்த ஓகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி எல்லைமீறி மீன்பிடித்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட அவர்களுடைய படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அவர்களுக்கு புதிய கடல்தொழில் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு இந்திய ரூபாய் பெறுமதியான தலா 26 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதம் செலுத்தவில்லையென்றால் அவர்கள் 3 மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.இதனால், தமிழக மீனவர்கள் அச்சப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு உரிய தீர்வை எடுக்க வேண்டும்.

அதனால், தமிழக மீனவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை மற்றும் அபராதத்தை ரத்து செய்து அவர்கள் விடுதலை செய்யப்படுவதற்கு உரிய நடவடிக்கைகளை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மேற்கொள்ள வேண்டும்.

மேலும் ஏற்கெனவே இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள மொத்தம் 16 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More