Home இலங்கை வடக்கு கிழக்கில் இனவாதமாம் – வீர துட்டகைமுனு இயக்கம் தொடங்கும் மேர்வின்

வடக்கு கிழக்கில் இனவாதமாம் – வீர துட்டகைமுனு இயக்கம் தொடங்கும் மேர்வின்

by admin

வீர துட்டகைமுனு இயக்கத்தை முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் ஆரம்பிக்கவுள்ளதாகவும் எதிர்வரும் 23 ஆம் திகதி அனுராதபுரத்தில் உத்தியோகபூர்வமாக இவ் இயக்கம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவித்தலை விடுத்துள்ள முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா வடக்கிலும், கிழக்கிலும் இனவாதம் உருவாவதை அனுமதிக்க முடியாது எனவும் கடந்த மன்னர்களது ஆட்சியின் போது இந்நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம், பேகர் ஆகிய சகலரும் ஒற்றுமையாக வாழ்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சிங்களவர்களுக்கு இந்நாட்டில் இருந்த உரிமைகள் இல்லாமல் போவதை அனுமதிக்க முடியாது எனவும் அதனை மீளவும் பெற்றெடுப்பது இந்த அமைப்பின் நோக்கமாகும் எனவும் மேவின் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மஹிந்த ராஜபக்ஸவின் குழுவும், ஜனாதிபதி, பிரதமர் தலைமையிலான அரசாங்கமும் இந்நாட்டிலுள்ள சிங்களவர்கள் வீழ்ந்துள்ள பாதாளத்திலிருந்து மீட்பதற்கு தவறியுள்ளதாக தெரிவித்துள்ள அவர் இவர்கள் வடக்கிற்குச் சென்று தமிழ் மக்களையும் கிழக்குக்குச் சென்று முஸ்லிம் மக்களையும் ஏமாற்றுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More