நீர்வேலி மக்கள் மற்றும் புலம் பெயர் தமிழர்களின் நிதி உதவியால் 3ஆம் கட்டமாக ஒட்டுசுட்டான் பிரதேச பிரிவிற்கு உட்பட்ட கனகரத்தினபுரம், வித்தியாபுரம் பேராறு ஆகிய கிராமத்தை சேர்ந்த 275 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் இன்று நீர்வேலி பிரதேச இளைஞர்களால் வழங்கப்பட்டன.
அத்துடன் முல்லைத்தீவு முத்தையன்கட்டு இடதுகரை ஜீவநகர் பகுதியில் கிருமித்தொற்று காரணமாக இறந்த சந்திரபாலன் சானுயா அவர்களின் குடும்பத்தினருக்கும் இதன்போது குறித்த இளைஞர்களினால் உதவிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Add Comment