Home இலங்கை கோத்தாபய ராஜபக்ஸ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமாட்டார்?

கோத்தாபய ராஜபக்ஸ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமாட்டார்?

by admin

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமாட்டார் என கொழும்பு டெலிகிராவ் செய்தி வெளியிட்டுள்ளது. தனது பிரஜாவுரிமையை ரத்துச்செய்யுமாறு கோரி அமெரிக்க அதிகாரிகளிடம் விண்ணப்பித்துள்ளதன் காரணமாக கோத்தாபய தேர்தலில் போட்டியிடமாட்டார் என ராஜபக்ஸவின் குடும்ப தகவல்கள் தெரிவித்தன எனவும் கொழும்பு டெலிகிராவ் குறிப்பிட்டுள்ளது

தான் அறிந்தவரையில் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எதுவும் கோத்தபாய ராஜபக்சவிற்கு இல்லை எனவும் தான் தேர்தலில் போட்டியிடுவேன் என கோத்தபாய பலரை நம்பவைத்துள்ளார் எனவும் ஒருவர் தெரிவித்துள்ளார் எனவும் கொழும்பு டெலிகிராவ் செய்தி வெளியிட்டுள்ளது

வர்த்தகர்கள் அவரிற்கு நாளாந்தம் பெருமளவு பணத்தை வழங்குகுவதன் காரணமாகவே கோத்தாபய ராஜபக்ஸவினால் கொழும்பில் ஆடம்பர வாழ்க்கை வாழமுடிகின்றது எனவும் அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை உறுதி செய்வதற்காக வர்த்தகர்கள் தொடர்ச்சியாக பணத்தை வழங்குகின்றனர் எனவும் ராஜபக்ஸ குடும்பத்த சேர்ந்த வட்டாரங்கள் தெரிவித்தன எனவும் கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More