Home இலங்கை சட்டவிரோதமாக பிரான்சுக்குள் நுழைந்த மீனவர்கள் நாடு கடத்தப்படுகின்றனர்

சட்டவிரோதமாக பிரான்சுக்குள் நுழைந்த மீனவர்கள் நாடு கடத்தப்படுகின்றனர்

by admin


சட்டவிரோதமாக பிரான்ஸ் நாட்டிலுள்ள ரீ யூனியன் என்ற தீவிற்குள் செல்ல முயன்ற 7 இலங்கை மீனவர்களை அங்கிருந்து நாடு கடத்தத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு பிரதேசத்திலிருந்து டிசெம்பர் மாதம் 5ஆம் திகதி மீனவப் படகு ஒன்றின் மூலம் குறித்த மீனவர்கள் பிரான்ஸ் நோக்கிச் சென்றுள்ள நிலையில் கடந்த வாரம் அந்நாட்டின் பாதுகாப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது

இவர்கள் சட்டவிரோதமாக அந்நாட்டுக்குள் நுழைந்துள்ளதால் அவர்களை அங்கிருந்து நாடு கடத்தவுள்ளதாக பிரான்ஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை அவ்வாறு நாடு கடத்தப்பட்ட மீனவர்களுள் ஒருவர் நேற்றைய தினம் நாட்டை வந்தடைந்துள்ளாரெனவும் இருவர் இன்றைய தினம் நாட்டுக்கு வருவார்களெனவும் இலங்கை மீன்பிடித் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More