Home இலங்கை நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த இந்திய மீனவர்கள் கடற்படையினரால் மீட்பு

நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த இந்திய மீனவர்கள் கடற்படையினரால் மீட்பு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த இந்திய மீனவர்கள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலிருந்து கடலிற்கு தொழிலிற்காக சென்ற 11 மீனவர்கள் இயந்திர கோளாறு காரணமாக தத்தளித்துக்கொண்டிருந்த நிலையில் இவ்வாறு இலங்கை கடற்படையினரால் கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

குறித்த பதினொரு பேரையும் அழைத்து வந்த கடற்படையினர் அவர்களை கிளிநாச்சியில் அமைந்துள்ள கடற்தொழில் நீரியல் வளங்கள் திணைக்களத்தினரிடம் ஒப்படைத்தனர். அங்கு குறித்த மீனவர்களிற்கான அத்தியாவசிய தேவைகளை இந்திய துணைத்தூதரகத்தினர் வழங்கினர்.

குறித்த பதினொருபேரையும் கிளிநாச்சி மாவட்ட நீதிமன்றில் முற்படுத்தி அடுத்தகட்ட செயற்பாடுகளை முன்னெடுக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த தம்மை கடற்படையினர் மீட்டுள்ளதாகவும், அவர்கள் தமக்க உணவு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி கொடுத்ததாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More