Home உலகம் கமரூனினில் துப்பாக்கி முனையில் 36 பயணிகள் கடத்தப்பட்டனர்..

கமரூனினில் துப்பாக்கி முனையில் 36 பயணிகள் கடத்தப்பட்டனர்..

by admin

கமரூனின் தென்மேற்கு பிராந்தியத்தில் துப்பாக்கி முனையில் 36 பயணிகள் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது கமரூனில், ஆங்கிலம் பேசும் மக்கள் அதிகம் வாழும் தென்மேற்கு மற்றும் வடமேற்கு பிராந்தியங்களை தனி சுதந்திர நாடாக அறிவிக்க வலியுறுத்தி, பிரிவினைவாத அமைப்புகள் ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.  எனினும் அவர்களை ஒடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதன் காரணமாக அரசபடைகளுக்கும், பிரிவினைவாத அமைப்புகளுக்குமிடையே தொடர்ந்து மோதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்றையதினம் தென்மேற்கு பிராந்தியத்தில் பியூவா-கும்பா நெடுஞ்சாலையில் சென்ற பயணிகள் பேருந்தை தடுத்து நிறுத்திய ஆயுதம் தாங்கிய குழுவொன்று பயணிகள் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி கடத்திச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More