Home இலங்கை ஏச்சில் துப்பியவர் மீது தாக்குதல்

ஏச்சில் துப்பியவர் மீது தாக்குதல்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வீதியில் பயணித்தவர் திடீரென எச்சில் துப்பியதில் அருகில் வந்தவர் மீது எச்சில் பட்டதால் ஆத்திரமடைந்த நபர் எச்சில் துப்பியவரை ஏரிக்குள் தள்ளிவிட்டு தாக்கிய சம்பவம் நேற்று சனிக்கிழமை கல்லுண்டாய் வெளிபகுதியில் இடம்பெற்றுள்ளது.

காக்கைதீவில் இருந்து யாழ்ப்பாண நகர் நோக்கி சென்றுகொண்டிருந்த நபர் ஒருவருக்கு முன்னால் சென்ற நபர் திடீரென்று தனது பக்கவாட்டில் துப்பியுள்ளார்.
பின்னால் சென்றவர் ஹெல்மட் கண்ணாடியை மூடாமல் சென்றதால் அவரின் முகத்தை அந்த எச்சில் பட்டதனால் ஆத்திரமும் ஆற்றாமையும் அடைந்த நபர் முன்னால் சென்றவரின் ஊந்துர்தியின் பின்பக்கம் மோதியுள்ளார.; சடுதியில் நிலைகுலைந்து முன்னால் சென்றவர் அருகில் உள்ள ஏரிக்குள் விழுந்துவிட்டார்.

துப்பு வாங்கியவரும் அந்த இடத்தில் சண்டித்தனத்துக்காக இறங்கிவிட்டார். ஏரிக்குள் விழுந்தவர் விழுந்த உடனேயே சேற்றை அள்ளி அவர்மீது எறிந்து மோதியுள்ளார்.

இவ்வாறான நிலையில் வீதியால் சென்றவர்கள் அவர்கள் இருவரையும் ஆசுவாசப்படுத்தி மோதலை தீர்த்துவைத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More