Home இந்தியா சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி ரத்து…

சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி ரத்து…

by admin


குடியரசு தினக் கொண்டாட்டங்களின்போது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனவரி 26ஆம் திகதி   இந்தியா முழுவதும் குடியரசு தின விழா கொண்டாடப்படவுள்ள நிலையில்    சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை, காமராஜர் சிலை அருகே குடியரசு தின விழா கொண்டாடப்படவுள்ளது.  இந்த நிலையில், குடியரசு தின விழாவைச் சீர்குலைக்க  தீவிரவாதிகள்  சதித் திட்டம் தீட்டியுள்ளதாக விடுக்கப்பட்டுள்  எச்சரிக்கையினையடுத்து    பாதுகாப்பு நடவடிக்கைகள்   பலப்படுத்தப்பட்டுள்ளன.

மக்கள் அதிகம் கூடும்   பகுதிகளில்  ஆயுதங்கள் ஏந்திய மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதுடன்   சென்னை விமான நிலையத்தில் ஜனவரி 31 நள்ளிரவு வரை பார்வையாளர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகள் கடும் சோதனையின் பின்னரே    உள்ளே அனுமதிக்கப்படுவார்கள எனவும் விமான நிலையம் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டு ஏழு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related Articles

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.