Home இலங்கை மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்கிறது…

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்கிறது…

by admin

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது இன்று (21) திங்கட்கிழமை 133 ஆவது நாளாக சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ச தலைமையில் இடம் பெற்றது.
மன்னார் மனித புதை குழியில் மனித எலும்புக்கூடுகள், தொடர்ச்சியாக அடையாளம் காணப்பட்டும் நடவடிக்கைகள் தொடர்கின்றன. மன்னார் மனித புதைகுழியில் இருந்த, அகழ்வு செய்யப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி, குறித்த மனித எச்சங்கள் எந்த காலப்பகுதியில் புதைக்கப்பட்டிருக்கலாம்?மரணம் நிகழ்ந்தது எவ்வாறு? என்பது தொடர்பாகவும் இந்தப் புதை குழி இயற்கையான மயானமா? அல்லது கொடுரமாக கொல்லப்பட்டு குறித்த புதைகுழியினும் புதைக்கப்பட்டனரா? என்பது தொடர்பான ஆய்வுக்காக மனித எலும்பு கூட்டு மாதிரிகள் தெரிவு செய்யப்பட்டு ஆய்வுக்காக அனுப்புவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதன. இந்த நிலையில் நாளை செவ்வாய்க்கிழமை (22.1.19) மன்னார் மனித புதைகுழி ஆய்வு பணி மற்றும் அகழ்வு பணி தொடர்பாகவும் ஆய்வுக்கு செல்லும் குழு மற்றும் ஆய்வு விபரங்கள் தொடர்பாகவும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம் பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More