Home இலங்கை தமிழ் கூட்டமைப்பு கடமையை சரியாக நிறைவேற்றியிருந்தால் தெற்கு செவி சாய்த்திருக்கும்

தமிழ் கூட்டமைப்பு கடமையை சரியாக நிறைவேற்றியிருந்தால் தெற்கு செவி சாய்த்திருக்கும்

by admin


தமிழ் கூட்டமைப்பு எதிர்கட்சியின் கடமையை சரியாக நிறைவேற்றியிருந்தால் இன்று அவர்களின் கோரிக்கைகளுக்கு தெற்கு செவி சாய்த்திருக்கும் என ஹம்பாந்தோட்டை மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

நேற்று விஜேராமயில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் ஊடகங்களுக்கு கருத்துவெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு நாட்டின் பொறுப்புவாய்ந்த எதிர்கட்சி பதவி வழங்கப்பட்டிருந்தது.நாட்டில் அனைத்து மக்கள் மீதும் தாக்கம் செலுத்தும் பல்வேறு பிரச்சினைகள் வந்த போதெல்லாம் மக்களின் குரலாக ஒலிக்க வேண்டிய எதிர்கட்சி பொறுப்பை சுமந்த தமிழ் கூட்டமைப்பு ரணில் விக்ரமசிங்கவையும் அரசாங்கத்தையும் பாதுகாக்கும் நடைமுறையையே பின்பற்றியது.

தங்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பை சரிவர அவர்கள் பயன் படுத்தியிருந்தால் வடக்கில் மாத்திரம் அல்ல முழு நாட்டில் உள்ள அனைத்து மக்களினதும் மனங்களையும் அவர்களால் வென்றிருக்க முடியும். ஆனால் அவர்கள் அதனை செய்யவில்லை.

இன்று புதிய அரசியலமைப்பிற்கு தெற்கின் ஆதரவை கோரும் அவர்கள் அன்று கிடைத்த வாய்ப்பை நழுவவிட்டு விட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More