Home சினிமா என் கதைக்கு நாயகனாக விஜய்தான் பொருத்தமானவர் – பிரபல எழுத்தாளர் சுசித்ரா ராவ்

என் கதைக்கு நாயகனாக விஜய்தான் பொருத்தமானவர் – பிரபல எழுத்தாளர் சுசித்ரா ராவ்

by admin


தி ஹைவே மாஃபியா என்ற நாவலை எழுதியிருக்கும் எழுத்தாளர் சுசித்ரா ராவ், தன்னுடைய நாவல் திரைப்படமாக்கப்படும் பட்சத்தில் அதற்கு பொருத்தமான நாயகன் விஜய்தான் என்று தெரிவித்துள்ளார்.

எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான சுசித்ரா ராவ் எழுதியுள்ள புதிய நாவல் தி ஹைவே மாஃபியா. இந்த நாவல் கால்நடைகளை கடத்துவதை மையப்படுத்தி உண்மை சம்பவங்களை தழுவி எழுதப்பட்டுள்ளன. அத்துடன் இந்த நாவலுக்கு வாசகர்கள் மத்தியில் கடுமையான வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

கால்நடை மாஃபியாவுக்கு எதிராக போராடும் தொழிலதிபர் அர்ஜூன் கிருஷ்ணன் என்ற கதாபாத்திரத்தை மையப்படுத்தி நாவலின் கதை நகர்கின்றது. அரசியல் கலந்த த்ரில்லர் பாணியில் எழுதப்பட்டிருக்கும் இந்த நாவலை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக இந்த கதையை எழுதியிருக்கும் சுசித்ரா ராவ் தெரிவித்துள்ளார்.

சரியான கதாபாத்திரங்கள் அமைந்தால் இந்த படத்தை தயாரிக்க தயாராக இருப்பதாக சில பிரபல தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த கதையில் யார் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று அவரிடம் கேட்கப்பட்டதற்கு பதிலளித்த சுசித்ரா, தமிழில் விஜய் தான் அர்ஜூன் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார். தெலுங்கில் மகேஷ் பாபு, கன்னடத்தில் யஷ் மற்றும் இந்தியில் சுஷாந்த் சிங் ராஜ்புட் நடித்தால் சரியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More