Home இலங்கை யாழில் தடை செய்யப்பட்ட பெருமளவிலான எதனோல் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது

யாழில் தடை செய்யப்பட்ட பெருமளவிலான எதனோல் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இலங்கையில் தடை செய்யப்பட்ட பெருமளவிலான எதனோல் போதைப் பொருள் பாரவூர்தியில் கடத்திச் செல்லப்பட்ட போது விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

யாழில் ரோந்தில் ஈடுபட்டு வருகின்ற விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலினடிப்படையில் மேற்கொண்ட நடவடிக்கையிலையே இப் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் போது பாரவூர்தி ஒன்றுடன்; 372 எதனோல் போத்தல் கொள்கலன்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. ஒவ்வாரு கொள்கலனும் 21 லீற்றர் கொள்ளளவைக் கொண்டவை என்பதுடன் மொத்தமாக 7420 லீற்றர் எதனோல் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பாராவுர்தியுடன் கைப்பற்றப்பட்ட எதனோல் போதைப் பொருளை சுன்னாகம் காவல்துறையினரிடம் இன்று விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளனர்.  இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னடுத்து வருகின்ற சுன்னாகம் காவல்துறையினர் இப் போதைப் பொருளையும் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டவர்களையும் நீதிமன்றில் முற்படுத்தவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More