Home இலங்கை புதிய ஆசிரியர் நியமனங்கள் வழங்கும் நிகழ்வு ஆளுநர் தலைமையில் :

புதிய ஆசிரியர் நியமனங்கள் வழங்கும் நிகழ்வு ஆளுநர் தலைமையில் :

by admin

வடக்கு மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்குதல், வடக்கு மாகாண அலுவலகங்களில் நிலவும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் மற்றும் வேலை மேற்பார்வையாளர் நியமனம் வழங்கும் நிகழ்வு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் தலைமையில் இன்று (26) யாழ் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இடம்பெற்றது.

இதனடிப்படையில் 249 ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்களும் 33 தொழில்நுட்ட உத்தியோகத்தர்களுக்கான நியமன கடிதங்களும் 10 வேலை மேற்பார்வையாளர்களுக்கான நியமனக் கடிதங்களும் இந்த நிகழ்வின்போது வழங்கி வைக்கப்பட்டது.

ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் மாகாண கல்வி அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட பெருமளவானோர் இந்த இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More