Home இலங்கைபிரிக்க முடியாத நாட்டில் அனைத்து உரிமையும் தமிழருக்கு வழங்க வேண்டும் :

பிரிக்க முடியாத நாட்டில் அனைத்து உரிமையும் தமிழருக்கு வழங்க வேண்டும் :

by admin

பிரிக்க முடியாத நாட்டிற்குள் தமிழ் மக்கள் அனைத்து உரிமைகளும் கிடைக்கப்பெற்றவர்களாய் வாழ வேண்டும் என்று வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். இன்று கிளிநொச்சியின் அறிவியல் நகர் பகுதியில் புதிய பேருந்து நிலைய திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இதனை அவர் தெரிவித்துள்ளார்.

தமிழர்களுக்கு உரிமை கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்பதுடன், இது தொடர்பான கோரிக்கைகளை தாம் உரிய தரப்பினரிடம் முன்வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தம் நிறைவடைந்து பத்தாண்டுகளைக் கடந்துள்ள நிலையில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த புகையிரதசேவையினை தான் வடக்கையும் தெற்கையும் இணைக்கும் உறவுப்பாலமாக கருதுவதாகவும் இவ்வாறான அபிவிருத்தித் திட்டங்களின் மூலம் எமது வேற்றுமைகளைக் களைந்து செயற்படுவதற்கு ஒரு சந்தர்ப்பமாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கின் ஆளுநர் என்ன ரீதியில் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க மறறும் இந்தியத் துணைத் தூதுவர் ஆகியோருக்கும் நன்றி செலுத்துவதாக கூறிய அவர், எதிர்காலத்தில் இவ்வாறான பல அபிவிருத்தித் திட்டங்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாகவும் மேலும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More