Home இலங்கை பாலியல் பலாத்காரத்திற்கு உடந்தையான பதின்ம வயதுச் சிறுமியின் தாயார் கைது…

பாலியல் பலாத்காரத்திற்கு உடந்தையான பதின்ம வயதுச் சிறுமியின் தாயார் கைது…

by admin

2ஆம் இணைப்பு – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பதின்ம வயதுச் சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்துவதற்கு உடந்தையாகவிருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறுமியின் தாயாரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி. போல் உத்தரவிட்டார்.

கொக்குவில் பகுதியில் குடும்பப் பெண் ஒருவருடன் முறையற்ற உறவை வைத்திருந்த வான் சாரதி ஒருவர், அந்தப் பெண்ணின் பதின்ம வயதுச் சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்தினார் என கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது.

அந்தப் பெண்ணிடமிருந்து மணநீக்கம் பெற்ற பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை இந்த முறைப்பாட்டை வழங்கினார். அதனடிப்படையில் தாயாரின் பாதுகாப்பிலிருந்த சிறுமியை மீட்ட  காவற்துறையினர், அவரை சட்ட மருத்துவரின் பரிசோதனைக்குட்படுத்தினர்.

அத்துடன் சந்தேகநபரை கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவையும் காவற்துறையினர்  கடந்த மாத முற்பகுதியில் யாழ்ப்பாணம் நீதிமன்றில் பெற்றிருந்தனர். எனினும் சந்தேகநபர் இந்தியாவுக்குச் சென்றிருந்ததால் அவரைக் கைது செய்ய முடியவில்லை.

இந்த நிலையில் சந்தேகநபர் கடந்த மாதம் யாழ்ப்பாணத்தில் அவரது உறவினர் ஒருவரின் இறுதி சடங்குக்கு வந்துள்ளமையை காவற்துறையினர்  அறிந்து கொண்டனர். அதனை அடுத்து சந்தேகநபர் வான் ஒன்றில் சென்று கொண்டிருந்த போது கைது செய்ததுடன் அவரது வானையும் கைப்பற்றினர்.

விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். அவருக்கு எதிராக ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டிருந்த சிறுமியை பாலியல் பலாத்காரத்துக்குட்படுத்திய குற்றச்சாட்டின் கீழான முதல் அறிக்கையின் கீழ் முற்படுத்தப்பட்டார். சந்தேகநபர் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி  முன்னிலையானார். சந்தேகநபர் சார்பில் அவர் பிணை விண்ணப்பத்தை முன்வைத்தார்.

“சந்தேகநபருக்கும் இந்தக் குற்றச்சாட்டுக்கும் தொடர்பில்லை. அவர் சிறுமியை தாயாரின் அனுமதியுடனேயே 3 தடவைகள் வெளியில் அழைத்துச் சென்றார். அதனால் சந்தேகநபரை பிணையில் விடுவிக்கவேண்டும்” என்று சிரேஸ்ட சட்டத்தரணி மன்றுரைத்தார்.

எனினும் சந்தேகநபர் சார்பான பிணை விண்ணப்பத்தை நிராகரித்த நீதிமன்று விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது. அவர் மீண்டும் நேற்றுமுன்தினம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியல் வரும் 18ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டது.

இந்த நிலையில் சந்தேகநபர் சிறுமியை தாயாரின் அனுமதியுடனேயே 3 தடவைகள் வெளியில் அழைத்துச் சென்றார் என்ற சந்தேகநபரின் சட்டத்தரணியால் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டதை காவற்துறையினர் ஆராய்ந்தனர். அதற்கு அமைய சிறுமியின் தாயாரை கோப்பாய் காவற்துறையினர்  கைது செய்தனர்.

சிறுமியின் தாயாரை காவற்துறையினர் கைது செய்து நேற்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் முன்னிலையில் முற்படுத்தினர். சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்த சந்தேநபருக்கு சிறுமியின் தாயார் உடந்தையாகவிருந்தார் என்ற குற்றச்சாட்டை காவற்துறையினர் முன்வைத்தனர்.

அந்தப் பெண் சார்பில் சட்டத்தரணி முன்னிலையாகி பிணை விண்ணப்பம் செய்தார். எனினும் பிணை விண்ணப்பத்தை நிராகரித்த நீதிவான், சிறுமியின் தாயாரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

பதின்ம வயதுச் சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தியவருக்கு விளக்கமறியல்…
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
Jan 29, 2019
“பதின்ம வயதுச் சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்துவது பாரதூரமான குற்றம். அது சமூகத்துக்கு அச்சுறுத்தல் விடுவிக்கும் சம்பவம். அவ்வாறான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவரை விசாரணைகள் நிறைவடைவதற்குள் பிணையில் விடுவிப்பது ஏற்புடையது அல்ல” என்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி. போல் சுட்டிக்காட்டினார்.
கொக்குவில் பகுதியில் பதின்ம வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் நீதிமன்றில் முற்படுத்திய சந்தேகநபரை பிணையில் விடுவிக்க முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்தை நிராகரித்து விளக்கமறியல் உத்தரவு வழங்கிய போதே நீதிவான் இதனைச் சுட்டிக்காட்டினார்.
கொக்குவில் பகுதியில் குடும்பப் பெண் ஒருவருடன் முறையற்ற உறவை வைத்திருந்த வான் சாரதி ஒருவர், அந்தப் பெண்ணின் பதின்ம வயதுச் சிறுமியை  வன்புணர்வுக்குட்படுத்தினார் என்று கோப்பாய் காவல்நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது.
அந்தப் பெண்ணிடமிருந்து மணநீக்கம் பெற்ற பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை இந்த முறைப்பாட்டை வழங்கியதனடிப்படையில் தாயாரின் பாதுகாப்பிலிருந்த சிறுமியை மீட்ட காவல்துறையினர், அவரை சட்ட மருத்துவரின் பரிசோதனைக்குட்படுத்தினர்.
அத்துடன் சந்தேகநபரை கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவையும் காவல்துறையினர் இந்த மாத முற்பகுதியில் யாழ்ப்பாணம் நீதிமன்றில் பெற்றிருந்தனர்.  எனினும் சந்தேகநபர் இந்தியாவுக்குச் சென்றிருந்ததால் அவரைக் கைது செய்ய முடியவில்லை.
இந்த நிலையில் சந்தேகநபர் கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் அவரது உறவினர் ஒருவரின் இறுதி சடங்குக்கு வந்துள்ளமையை காவல்துறையினர் அறிந்து கொண்டனர். அதனை அடுத்து சந்தேகநபர் நேற்றுத் திங்கட்கிழமை வான் ஒன்றில் சென்று கொண்டிருந்த போது கைது செய்ததுடன் அவரது வானையும் கைப்பற்றினர்.
விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். அவருக்கு எதிராக ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டிருந்த சிறுமியை பாலியல் பலாத்காரத்துக்குட்படுத்திய குற்றச்சாட்டின் கீழான முதல் அறிக்கையின் கீழ் முற்படுத்தப்பட்டார்.  சந்தேகநபர் சார்பில் முன்னிலையான  சிரேஸ்ட சட்டத்தரணி   சந்தேகநபர் சார்பில் அவர் பிணை விண்ணப்பத்தை முன்வைத்தார்.
“சந்தேகநபருக்கும் இந்தக் குற்றச்சாட்டுக்கும் தொடர்பில்லை. அவர் சிறுமியை தாயாரின் அனுமதியுடனேயே 3 தடவைகள் வெளியில் அழைத்துச் சென்றார். அதனால் சந்தேகநபரை பிணையில் விடுவிக்கவேண்டும்” என்று  சிரேஸ்ட சட்டத்தரணி மன்றுரைத்தார்.
சந்தேநபர் சார்பான பிணை விண்ணப்பத்தை ஆராய்ந்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல், “பதின்ம வயதுச் சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்துவது பாரதூரமான குற்றம். அது சமூகத்துக்கு அச்சுறுத்தல் விடுவிக்கும் சம்பவம்.
அத்துடன், சந்தேகநபருக்கு எதிரான குற்றச்சாட்டுத் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முடிவுறுத்தவில்லை. அதனால் பிணை விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது” என்று சுட்டிக்காட்டி சந்தேநபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More