Home இந்தியா ஐதராபாத்தில் கண்காட்சியில் ஏற்பட்ட தீவிபத்தில் 100 கடைகள் அழிவு – 7பேர் காயம்

ஐதராபாத்தில் கண்காட்சியில் ஏற்பட்ட தீவிபத்தில் 100 கடைகள் அழிவு – 7பேர் காயம்

by admin


ஐதராபாத்தில் கண்காட்சி நடைபெற்ற இடமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் அழிவடைந்துள்ளதுடன் 7 பேர் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஆங்கு கடந்த முதலாம் திகதி முதல் நமாய்ஷ் என்ற பெயரில் அகில இந்திய தொழில்துறை கண்காட்சி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 45 நாட்கள் இடம்பெறும் இந்தக் கண்காட்சியில் 100க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்கள் உள்ளன.

இந்நிலையில், கண்காட்சி அரங்கில் உள்ள கடை ஒன்றில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீவிபத்து ஏனைய கடைகளுக்கும் தீ பரவியுள்ளது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும், அப்பகுதிக்கு 13 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதுடன் கண்காட்சி அரங்கில் இருந்த பொதுமக்கள் மற்றும் காயமடைந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

இந்த தீ விபத்தில் 7 பேர் பலத்த காயமடைந்தனர் எனவும் சுமார் 100 கடைகள் தீயில் கருகி சாம்பலாகியுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More