Home சினிமா சேது, பிதாமகன் படங்களை கொடுத்த, பாலாவுடனான நட்பை மீறி வர்மாவை கைவிடச் சொன்ன விக்ரம்!

சேது, பிதாமகன் படங்களை கொடுத்த, பாலாவுடனான நட்பை மீறி வர்மாவை கைவிடச் சொன்ன விக்ரம்!

by admin

நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் பிரபல இயக்குனர் பாலா இயக்கிய வர்மா திரைப்படத்தை கைவிடுவதாகவும், மீண்டும் திரைப்படத்தை இயக்கவுள்ளதாகவும் அதில் பாலா இயக்குனர் இல்லை என்றும் படத்தை தயாரித்துள்ள நிறுவனம் நேற்று அறிவித்திருந்தது.
பிதாமகன், சேது முதலிய பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படங்களை நடிகர் விக்ரமுக்கு அளித்து, அவரது திரையுலகில் பெரும் முக்கியத்துவத்தை ஏற்படுத்தியவர் இயக்குனர் பாலா. அவருடன் நட்பை முறித்துக் கொண்டு, தனது மகனுக்காக விக்ரம் எடுத்த முடிவு தமிழ் திரையுலகில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல முன்னணி, இயக்குனர் ஒருவர் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ள நிலையில், அத் திரைப்படம் கைவிடப்படுவதாகவும் மீண்டும் அந்த திரைப்படத்தை புதிய இயக்குனரை கொண்டு இயக்கப் போவதாகவும் அறிவிக்கப்படும் அறிவித்தலை முதன் முதலில் திரையுலகம் சந்திகின்றமை பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
அர்ஜுன் ரெட்டி என்ற தெலுங்குப் படத்தை ‘வர்மா’ என்ற பெயரில், இயக்குனர் பாலா, தமிழில் மீள் உருவாக்கம் செய்துள்ளார்.  பாலா இயக்க விக்ரம் மகன் துருவ் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து படம், வெளியீட்டுக்கு தயாரான நிலையில் இருந்தது.
இந்த மாதம் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தை கைவிடுவதாக படத்தை தயாரித்துள்ள  இ4 என்டர்டெயின்மெண்ட்  நிறுவனம் அறிவித்தது. படத்தின் இறுதி வடிவம் எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கவில்லை. மேலும் படத்தின் உருவாக்கத்தில் பல்வேறு வேறுபாடுகள் இருப்பதால், படத்தை கைவிட முடிவு செய்துள்ளதாக அந் நிறுவனம் கூறியுள்ளது.

இதன் பின்னணி குறித்து இவ்வாறு கூறப்படுகின்றது. முதலில் படத்தை மறு உருவாக்கம் செய்ய இயக்குனர் பாலா விரும்பவே இல்லை என்றும் அவரை கட்டாயப்படுத்தி தான் சம்மதிக்க வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. அத்துடன் வர்மா படத்தின் கதையில் பாலா பல மாற்றங்கள் செய்து தனித்துவமாக மாற்ற முற்பட்டதே சிக்கலை உருவாக்கியதாகவும் கூறப்படுகின்றது.

இசையமைப்பாளராக இளையராஜாவை ஒப்பந்தம் செய்யலாம் என்று சொன்னபோதும் விக்ரம் அதை நிராகரித்து அர்ஜுன் ரெட்டி தெலுங்கு படத்தின் இசையமைப்பாளர் ரதனை ஒப்பந்தம் செய்ய வலியுறுத்தியதாகவும் முழு படத்தையும் பார்த்த விக்ரமுக்கும், அவரது மகன் துருவ்வுக்கும் திருப்தி இல்லை என்றும் கூறப்படுகின்றது.

நெருக்கமான காட்சிகள் அதிகமாக படத்தில் இருந்ததாகவும் இதனால் கோபமான துருவ் சினிமாவே வேண்டாம் என்று கூறி அமெரிக்காவுக்கு சென்றுள்ளதாகவும் திரைப்படம் வெளியானால், துருவ்வுக்கு மோசமான தொடக்கமாக அமையும் என்பதன் காரணமாகவே, விக்ரம் பாலாவின் நட்பை மீறி இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More