Home சினிமா மீண்டும் முதலில் இருந்து தொடங்கும் வர்மா – கௌதம் மேனன்

மீண்டும் முதலில் இருந்து தொடங்கும் வர்மா – கௌதம் மேனன்

by admin



பாலா இயக்கி கைவிடப்பட்ட ‘வர்மா’ திரைப்படத்தை, மீண்டும் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான விக்ரமை  ‘சேது’ என்ற திரைப்படம் நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்தியவர் இயக்குனர் பாலா.. சேது திரைப்படத்துடன் பாலா இயக்கிய ‘பிதாமகன்’ படம், இவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுக் கொடுத்தது.

இதனால் தனது மகன், துருவ் விக்ரதையும் பாலாவின் இயக்கத்தில் அறிமுகம் செய்ய நடிகர் விக்ரம் விரும்பினார். அதற்கு இயக்குனர் பாலாவும் சம்மதித்த நிலையில், ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடிய ‘அர்ஜுன் ரெட்டி’ என்ற தெலுங்கு திரைப்படத்தை தமிழில் தயாரிக்கும் உரிமையை வாங்கி, வர்மா என்ற பெயரில் இயக்கப்பட்டது.
படத்தொகுப்பு, குரல்பதிவு, இசை முதலிய அனைத்து வேலைகளும் முடிந்த நிலையில், படம் திருப்தி அளிக்கவில்லை எனக் கூறி தயாரிப்பாளரும் நடிகர் விக்ரமும் திரைப்படத்தை கைவிட முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் வர்மா திரைப்படத்தை வேறு ஒரு இயக்குனரை வைத்து, மீண்டும் ஆரம்பத்தில் இருந்து இயக்கவுள்ளதாக தயாரிப்பாளர் கூறினார். கௌதம் மேனன் இந்த திரைப்படத்தை இயக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கதாநாயகனாக துருவ் நடிக்க,ஏனைய அனைத்து நடிகர் மற்றும் நடிகைகளும் மாற்றப்படவுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More