Home இலங்கை கொட்டகலை மேபீல்ட் தோட்ட பகுதி ஆலயம் உடைத்து திருட்டு

கொட்டகலை மேபீல்ட் தோட்ட பகுதி ஆலயம் உடைத்து திருட்டு

by admin

திம்புள்ள பத்தனை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட மேபீல்ட் தோட்ட சாமஸ் பிரிவின் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் பிரதான நுழைவாயில் உடைக்கப்பட்டு அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான தாலி களவாடிச் செல்லப்பட்டுள்ளது.

இன்று (14.02.2019 ) அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என விசாரணைகளை மேற்கொள்ளும் திம்புள்ள பத்தனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குடந்த 2018.04.20 அன்று இவ்வாலயத்தின் கும்பாபிஷேகம் நடைபெற்றபோது அம்மனுக்கு அணிவித்த தங்க தாலியே இவ்வாறு இன்று அதிகாலை திருடப்பட்டுள்ளது.

இது குறித்து திம்புள்ள பத்தனை காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டினையடுத்து பத்தனை காவல்துறையினரும் நுவரெலியா காவல்துறைக் குற்ற தடுப்பு பிரிவினரும், கைரேகை பிரிவினரும் ஆலய கட்டிடத்திற்கு சென்று சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

எனினும் சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனத் தெரிவித்த காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்
(க.கிஷாந்தன்)

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More