ஜம்மு-காஷ்மீரில் இன்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்திலுள்ள ஸ்ரீநகர் – ஜம்மு நெடுஞ்சாலையில் விடுமுறை முடிந்து மீண்டும் பணியில் இணைவதற்காக 2500-க்கும் மேற்பட்ட வீரர்கள் 78 வாகனங்களில் சென்று கொண்டிருந்த போது வெடிகுண்டுகள் நிரப்பிய வாகனத்தினால் மோதி இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் ஒரு வாகனம் முற்றிலும் எரிந்துள்ளநிலையில் அதில் சென்று கொண்டிருந்த 40 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love
Add Comment