Home இலங்கை புரோட்லேன்ட் நீர் மின் உற்பத்தி நிலையத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

புரோட்லேன்ட் நீர் மின் உற்பத்தி நிலையத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

by admin

ரோட்லேன்ட் நீர் மின் உற்பத்தி நிலைய காரியாலயத்திற்கு முன்பாக பொல்பிட்டிய பிரதேச மக்கள் 50ற்கும் மேற்பட்டோர் இன்று காலை ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுப்பட்டுள்ளனர். புரோட்லேன்ட் நீர் மின் உற்பத்தி நிலையத்திற்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

புரோட்லேன்ட் நீர் மின் உற்பத்தியினால் பாதிக்கப்பட்ட 37 குடும்பங்களில் 4 குடும்பங்களுக்கு மாத்திரமே நஷ்டஈடு தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும், ஏனையவர்களுக்கு இன்னும் நஷ்டஈடு தொகை வழங்கவில்லை என தெரிவித்தே இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

நீர் மின் உற்பத்தி நிலையம் அமைந்துள்ள பொல்பிட்டிய பகுதியில் வசித்து வந்த மக்கள் மின் உற்பத்தி நிலையத்தின் வேலைத்திட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு பல வருட காலமாக முகங்கொடுத்து வந்துள்ளனனர்.
33 குடும்பங்களை சேர்ந்தத்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வந்துள்ள நிலையில் அவர்களின் குடியிருப்புகளும் அங்கு வெட்டப்பட்டுள்ள சுரங்கப்பாதையினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

எமது குடியிருப்புகள் பாதிப்புகளுக்கு புரோட்லேன்ட் நீர்மின் உற்பத்தி நிலையம் வீடுகளை கட்டுவதற்கு நஷ்டஈடுகளை தரும்படி இதன்போது வலியுறுத்தப்பட்டது. கடந்த காலங்களில் இவர்களுடைய போராட்டம் நீர்மின் உற்பத்தி நிலையத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(க.கிஷாந்தன்)

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More