Home இலங்கை பொது இடத்தில் – வீதிகளில் வெடி கொழுத்துவது தவறு

பொது இடத்தில் – வீதிகளில் வெடி கொழுத்துவது தவறு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

‘பொது இடத்தில் – வீதிகளில் வெடி கொழுத்துவது தவறாகும். சாவு ஊர்வலமாக இருந்தாலும் சரி வெடிகொழுத்துவதற்குரிய முறைகள் உள்ளன. வீதியில் பயணிப்பவர்களுக்கு இடையூறாக வெடிகொழுத்துவதை ஏற்க முடியாது’ என யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி.போல் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் இருபாளைச் சந்திப்பகுதியில் இறுதி ஊர்வலம் ஒன்றில் வெடிகொழுத்தப்பட்ட வெடி வீதியூடாகப் பயணித்த ஹஏஸ் வான் ஒன்றின் கண்ணாடிப் பகுதியில் வெடி வந்து வீழ்ந்த்தால், கண்ணாடி முற்றாகச் சேதமடைந்த்தது.

இதனையடுத்து அந்த இறுதி ஊர்வலத்துடன் வெடி கொழுத்தி வந்த ஒருவரை கண்டுகொண்ட வானின் உரிமையாளர், தனது அலைபேசியில் ஒளிப்படம் எடுத்துள்ளதுடன், தனது வான் கண்ணாடியை மாற்றியமைப்பதற்கு 57 ஆயிரம் ரூபா பணத்தை வழங்குமாறும் குறித்த நபரிடம் கேட்டுள்ளார்.

எனினும் இரு தரப்புக்கும் இடையே இணக்கம் ஏற்பட்டாததால் வான் சாரதி கோப்பாய் காவல் நிலையத்தில் வெடியுடன் வந்த நபரின் ஒளிப்படத்தை சமர்ப்பித்து முறைப்பாடு வழங்கினார்.

அதுதொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் இரு தரப்பையும் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.

‘குற்றஞ்சாட்டப்பட்டவர்தான் வான் மீது வெடிகொழுத்தி போட்டதற்கு ஆதாரம் இல்லை. அவர் வெடியை வைத்திருந்ததால் அவர் மீது பழிபோட முடியாது. வாகனத்துக்கு வெடிகொழுத்தி எறியவில்லை, அவ் வழியால் பயணித்ததால் வாகனத்தில் பட்டுவிட்டது’ என்று குற்றஞ்சாட்டப்பட்டவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மன்றுரைத்தார்.

‘முறைப்பாட்டாளரால் வழங்கப்பட்ட ஒளிப்பட்டத்தில் வேறு எவருமே வெடி வைத்திருப்பதாக இல்லை.

பொது இடத்தில் – வீதிகளில் வெடி கொழுத்துவது தவறாகும். இறுதி ஊர்வலத்தில் வெடிகொழுத்தும் போது பொதுப் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கக் கூடாது’ என்று குற்றஞ்சாட்டப்பட்டவரை எச்சரித்த நீதிவான் ஏ.எஸ்.பி.போல், வழக்கை ஒத்திவைத்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More