Home இலங்கை அரச நிறுவன ஊழல்கள் தொடர்பில் 70 முறைப்பாடுகள்

அரச நிறுவன ஊழல்கள் தொடர்பில் 70 முறைப்பாடுகள்

by admin


அரசாங்க நிறுவனங்களில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் ஊழல் பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இதுவரை 70 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015 ஜனவரி 15 முதல் 2018 டிசம்பர் 31 வரையான காலத்தில் கிடைக்கப்பபெற்றுள்ள இந்த முறைப்பாடுகள் தொடர்பில் எதிர்வரும் 28ம் திகதியிலிருந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என அந்த ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்க நிறுவனங்களில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் ; ஊழல் பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு கடந்த 14ம் திகதி கூடிய போது ஆணைக்குழுவுக்கு முதலில் கிடைத்த 48 முறைப்பாடுகளில் இரண்டினை விசாரிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More