Home உலகம் கட்டலோனியா பிரிவினைவாத தலைவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதை எதிர்த்து பேரணி

கட்டலோனியா பிரிவினைவாத தலைவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதை எதிர்த்து பேரணி

by admin


கட்டலோனியா பிரிவினைவாத தலைவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதை எதிர்த்து ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் பேரணியொன்றினை நடத்தியுள்ளனர்.

சுமார் இரண்டு லட்சம் பேர் பங்கேற்ற இந்த பேரணியின்போது, கட்டலன் கொடியை ஏந்தியவாறு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் 12 பிரிவினைவாத தலைவர்களுக்கும் ஆதரவான கோசங்களை போராட்டக்காரர்கள் எழுப்பியுள்ளனர்.

ஸ்பெனிலிருந்து கட்டலோனியாவை பிரித்து தனி நாடாக்கும் வகையில், கடந்த 2017ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நடத்தப்பட்டு, தோல்வியடைந்த பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை தொடர்ந்து, அந்த கோரிக்கையை முன்னெடுத்த தலைவர்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

பிரிவினைவாத தலைவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், சிலர் அதிகபட்சமாக 25 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடலாம்.

அண்மையில் கட்டலன் பிரிவினைவாதிகள் ஸ்பெயின் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொண்டதால், அந்நாட்டு பாராளுமன்றத்தின் பதவிக்காலம் முடியும் முன்னரே தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More