Home இந்தியா ஸ்டெர்லைட் வழக்கு தொடர்பில் நாளை தீர்ப்பு

ஸ்டெர்லைட் வழக்கு தொடர்பில் நாளை தீர்ப்பு

by admin

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு நாளை வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க உத்தரவிடக்கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கடந்த 7ம் திகதி , திகதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில் நாளை திங்கட்கிழமை இந்த வழக்கின் மீதான தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்து உள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More