Home இலங்கையாழ் நாகர்கோவிலில் மேலும் 3 குண்டுகள் மீட்பு :

யாழ் நாகர்கோவிலில் மேலும் 3 குண்டுகள் மீட்பு :

by admin

யாழ்ப்பாணம், நாகர்கோவில் மேற்கு பகுதியில் அண்மையில் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் மூன்று குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 120மில்லி மீட்டர் குண்டு ஒன்று மீட்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 81 மில்லி மீட்டர் குண்டுகள் மூன்று மீட்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில் மேற்கு பகுதியில் வீட்டு வளவு ஒன்றில் கிணறு வெட்டிய போது மோட்டார் குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள, நிலையில், அதனை தோண்டி எடுப்பதற்கான உத்தரவை பருத்தித்துறை நீதிமன்றம் வழங்கியிருந்தது. குண்டுகள் மீட்கப்பட்ட பகுதி, பல வருடங்களாக தொடர்ந்து போர் இடம்பெற்ற பகுதியாகும்.

இந்த விடயம் தொடர்பில் பருத்தித்துறை காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அப்பகுதிக்கு சென்ற காவல்துறையினர் 120 மில்லிமீட்டர் மோட்டார் குண்டு ஒன்று மீட்டிருந்த நிலையில் தற்போது 81மில்லி மீட்டர் குண்டுகள் மூன்றை மீட்டுள்ளனர். பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டு அப்பகுதி அகழ்வு செய்யப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More