Home இலங்கை பாடசாலை சீருடையுடன் மாணவன் தூக்கிட்டமைக்கான காரணம் வெளியானது :

பாடசாலை சீருடையுடன் மாணவன் தூக்கிட்டமைக்கான காரணம் வெளியானது :

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை(15) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் வெளியாகியுள்ளது.

கருங்கண்டல் ம.வி பாடசாலையில் உயர் தர வகுப்பில் கல்வி கற்கும் ஜே.நிர்மலன் எனும் மாணவனே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தார்

குறித்த மாணவன் வழமை போல் கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலைக்குச் சென்ற போது பாடசாலையின் அதிபர் காலை குறித்த மாணவனை அழைத்து உடனடியாக வீட்டிற்குச் சென்று உரிய முறையில் முகச் சவரம் செய்து விட்டு பாடசாலைக்கு வருமாறு தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனையடுத்து  வீட்டுக்குச் சென்ற மாணவன் மீண்டும் வீட்டில் இருந்து பாடசாலை சீருடையுடன் வெளியில் சென்ற நிலையில் மணல் காடு பகுதியில் தூங்கில் தொங்கிய நிலையில் அன்றிரவே சடலமாக மீட்கப்பட்டார்.

சக மாணவர்கள் முன்னிலையில் பாடசாலை அதிபர் மாணவனை அழைத்து கூறியமையினால் மனமுடைந்து குறித்த முடிவை எடுத்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.குறித்த மாணவன் பல் துறைகளிலும் ஆற்றல் மிக்கவர் என தெரிவிக்கப்படுகின்றது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More