Home இலங்கைகிளிநொச்சியில் இரண்டாவது தடவையாக திறக்கப்படவுள்ள பசுமை பூங்கா

கிளிநொச்சியில் இரண்டாவது தடவையாக திறக்கப்படவுள்ள பசுமை பூங்கா

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சி டிப்போச் சந்தியில் அமைந்துள்ள பசுமை பூங்கா நாளையதினம்(22) இரண்டாவது தடவையாக மேல் மாகாண மற்றும் மாநகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.

நகர அபிவிருத்தி அதிகார சபையினரால் 40 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட குறித்த பசுமை பூங்கா கடந்த வருடம் நவம்பர் மாதம் 26 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனால் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிலையில் அதே பசுமை பூங்காவினை நாளைய தினம் வெள்ளிக்கிழமை அமைச்சர் பாட்டளி  சம்பிக்க ரணவக்கவும் திறந்து வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் நவம்பர் மாதம் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனால் திறந்து வைக்கப்பட்டபோதும் கரைச்சி பிரதேச சபை நிதி பல ஆயிரம் ரூபாக்கள் நிகழ்வுக்கு செலவு செய்யப்பட்டது. அவ்வாறே நாளைய தினமும் நகர அ பிவிருத்தி அதிகார சபையின் நிதி பல ஆயிரம் செலவு செய்யப்பட்டு விழா ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More