Home இலங்கைபயங்கரவாத திருத்தச் சட்டத்தை எதிர்த்து மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்

பயங்கரவாத திருத்தச் சட்டத்தை எதிர்த்து மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்

by admin


புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத திருத்தச் சட்டத்தை எதிர்த்து மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்னால் இன்றைதினம் மேற்கொள்ளப்பட்ட இந்த கவனயீர்ப்பு போராட்டம் மட்டக்களப்பு மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டடில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் புத்திஜீவிகள் மற்றும் மதகுருமார்கள் பங்கேற்ற இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் நடைமுறையிலே உள்ள குற்றவியல் சட்டம் போதுமானது பயங்கரவாத எதிர்ப்பு சட்டம், பயங்கரவாத தடைச் சட்டம் வேண்டாம் என கோசங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More