Home இலங்கைஅரசாங்கத்துக்கு எதிராக சட்டநடவடிக்கை

அரசாங்கத்துக்கு எதிராக சட்டநடவடிக்கை

by admin


மாகாண சபைகள் கலைக்கப்பட்டுள்ளமையினால் மாகாணங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுமாயின், அரசாங்கத்துக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென மாகாண ஆளுநர்கள் தெரிவித்துள்ளனர்.

மாகாணங்களின் ஆளுநர்கள் சிலர் நேற்றையதினம் காலியில் ஏற்பாடு செய்திருந்த ஒன்றிணைந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே   இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இதன் போது கருத்து தெரிவித்த மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலி தற்போது காணப்படும் சிக்கல்கள் தொடர்பில் ஆராய்ந்து ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பாக மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை நாட்டில் 85 சதவீதமான நிர்வாக நடவடிக்கைகள் மாகாண சபைகள் ஊடாகவே முன்னெடுக்கப்படுவதால் தேர்தலை உரிய நேரத்தில் நடத்த இடமளிக்க வேண்டும் என தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More