Home சினிமா மகேந்திரன் நடிக்கும் நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு

மகேந்திரன் நடிக்கும் நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு

by admin


மாஸ்டர் மகேந்திரன் என குழந்தை நட்சத்திரமாக அறியப்பட்ட மகேந்திரன் மற்றும் மியாஸ்ரீ நடிப்பில் எதிர்பார்ப்பு கலந்த மர்மத் திரைப்படமாக உருவாகி வரும் நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தை  நல்.செந்தில்குமார் இயக்குகின்றார்.

பல அரசியல் குழப்பங்கள், பொருளாதார சிக்கல்கள், வாழ்வாதாரத்துக்கான போராட்டங்கள் என தொடர்ந்து தமிழ்நாடு சிக்கல்களை சந்தித்து வரும் வேளையில், இதனை பிரதிபலிக்கும் வகையில் “நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு” என்ற திரைப்படம் உருவாககப்படுகின்றது. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகின்றார் நல்.செந்தில்குமார்.

அடிப்படை வசதிகள் கூட இல்லாத ஒரு கிராமத்தில் இதுவரை எந்த தலைமுறையும் சந்திக்காத, பார்க்காத பல்வேறு மர்மமான சம்பவங்களும், பிரச்சனைகளும் அடுத்தடுத்து தொடர்ந்து நடக்கின்றது. ஒரு கட்டத்தில் பிரச்சனைகள் தீவிரமடைந்து மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. தொடர்ச்சியாக நடக்கும் சம்பவங்களுக்கு என்ன காரணம் என்பதை கதாநாயகன் கண்டுபிடித்து தனது கிராமத்தையும், மக்களையும் எப்படி காப்பாற்றினார் என்பதை திருப்புமுனை கலந்த மர்மம் கொண்ட விறுவிறுப்பான திரைக்கதையை இயக்குனர் உருவாக்கியுள்ளார்.

மகேந்திரன் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு நாயகியாக மியாஸ்ரீ நடித்திருக்கிறார். இவர்களுடன் ஆர்.சுந்தர்ராஜன், மனோஜ் குமார், பசங்க சிவக்குமார், அப்புக்குட்டி, தவசி, பெஞ்சமின், லொள்ளு சபா உதயா, மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜெ.ஆர்.கே ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்துள்ளார். கம்பம் மூர்த்தி படத்தொகுப்பை மேற்கொள்குகிறார். ஜி.எஸ். ஆர்ட்ஸ் சார்பில் பூக்கடை ஜி.சேட்டு இந்தத் திரைப்படத்தை தயாரிக்கின்றார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More