Home இலங்கை வடக்கில் அதிகரிக்கும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த 850 தமிழ் காவற்துறையினர்…

வடக்கில் அதிகரிக்கும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த 850 தமிழ் காவற்துறையினர்…

by admin


வடக்கில் அதிகரிக்கும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த 850 தமிழ் காவற்துறையினர் புதிதாக இணைக்கப்படவுள்ளனர் என்று வடக்கு மாகாண சிரேஸ்ட காவற்துறை அத்தியட்சகர் கனேசநாதன் தெரிவித்தார்.

யாழ்.மாவட்டச் செயலகத்தில் இன்று மாவட்ட சிவில் பாதுகாப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர், வடக்கு மாகாணத்தில் புதிதாக 850 தமிழ் காவற்துறையினர் இணைக்கப்படவுள்ளனர். 18 வயதுக்கு 28 வயதுக்கு இடைப்பட்ட 5 அடி 4 அங்குலம் உயரமுடைய இளைஞசர், யுவதிகள் முன்வரவேண்டும்.

இலங்கையின் சனத்தொகை 2 கோடியே 30 இலட்சமாகும். இவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வெறுமனே 85 ஆயிரும் காவற்துறையினரும், 10 ஆயிரம் விசேட அதிரடிப் படையினரும் உள்ளனர்.

இதனால் மேலதிக காவற்துறையினர் எமக்கு தேவையாக உள்ளார்கள். நாளை வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனுடன் இணைந்து காவற்துறை மா அதிபரை நான் சந்திக்க உள்ளதாகவும், அவரிடம் இவ்விடயம் தொடர்பில் பேசஉள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More