Home இந்தியா சிதம்பரம் நடராஜர் கோவிலில் 7195 பேர் பங்கேற்ற நாட்டியாஞ்சலி கின்னஸ் சாதனை

சிதம்பரம் நடராஜர் கோவிலில் 7195 பேர் பங்கேற்ற நாட்டியாஞ்சலி கின்னஸ் சாதனை

by admin

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் கின்னஸ் சாதனைக்காக மாணவ- மாணவிகள் உள்பட 7195 பங்கேற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இன்று நடைபெற்ற இந்த நிகழ்சிசயில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்கள், மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் மாணவ-மாணவிகள் மற்றும் கலைஞர்கள் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபம், 4 வெளிப்புற பிரகாரங்களிலும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி காலை 8 மணிக்கு தொடங்கி 8.45 மணிவரை நடைபெற்றது.

முன்னதாக இந்த நிகழ்ச்சியை நாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் முருகேசன் வாழ்த்தி பேசினார். கின்னஸ் உலக சாதனை பதிவு அதிகாரி இங்கிலாந்தை சேர்ந்த ரிஷிநாத் கலந்து கொண்டு உலக சாதனையில் இதனை பதிவு செய்தார்.

இதற்கு முன்பு சென்னை வேல்டெக் வளாகத்தில் 4 ஆயிரத்து 500 பேர் கலந்து கொண்ட நாட்டியாஞ்சலி நடத்தப்பட்டிருந்தது. தற்போது அதனை முறியடித்து 7 ஆயிரத்து 195 நாட்டிய கலைஞர்கள் கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More