மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் தாம் வெள்ளைவான் கடத்தல் சம்பவங்களுடன் ஈடுபடவில்லை என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எனினும் யுத்தத்தில் வெற்றி கொள்ளும் விதமாகவும் அதனை முடிவுக்கு கொண்டுவரும் விதமாகவும் தாம் நுண்ணறிவான செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரிவித்த அவர் மக்களை பாதிக்கும் எந்தவொரு செயற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான செயற்பாடுகள் மூலமாக 30 வருட காலமாக நாட்டில் இடம்பெற்ற போரை முடிவுக்கு கொண்டு வந்துள்ள மகிந்த ராஜபக்ச அனைத்து மக்களும் மகிழ்ச்சியாக வாழும் சூழலை ஏற்படுத்தியுள்ளார் எனவும் கோத்தாபய ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.
Spread the love
Add Comment