Home இலங்கை மாலைத்தீவில் கைது செய்யப்பட்ட 25 மீனவர்களில் 21 பேர் விடுதலை

மாலைத்தீவில் கைது செய்யப்பட்ட 25 மீனவர்களில் 21 பேர் விடுதலை

by admin


மாலைத்தீவில் கடந்த வெள்ளிக்கிழமை எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட 25 இலங்கை மீனவர்களில் 21 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என கடற்றொழில் அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

எனினும், கைதுசெய்யப்பட்ட 4 படகோட்டிகளை மாலைதீவு அரசாங்கம் தடுத்து வைத்துள்ளதாகவும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த நான்கு 4 படகோட்டிகளையும் விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை மாலைதீவு தூதரகம் ஊடாக முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விடுவிக்கப்பட்ட 21 பேரிடமும் வெளிநாட்டு கடவுச்சீட்டு இல்லாத காரணத்தினால் விரைவில் வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக்கொடுத்து விமானம் மூலம் அவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More