Home இலங்கை தமிழக மீனவர்களின் 6 மீன் பிடி படகுகள் அரசுடமையாக்க உத்ததரவு..

தமிழக மீனவர்களின் 6 மீன் பிடி படகுகள் அரசுடமையாக்க உத்ததரவு..

by admin


சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தமிழக மீனவர்களின் ஆறு மீன் பிடி படகுகள் அரசுடமையாக்கப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  கடந்த நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் 12 ஆம் திகதி வரை எல்லை தாண்டி மீன் பிடியில் ஈடுபட்டதாக தெரிவித்து இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட இராமேஸ்வரம், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த ஆறு மீன்பிடி படகுகளுக்கான வழக்கு நேற்று ஊர்காவற்த்துறை நீதிமன்ற நீதிபதி ஏ. யூட்சன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதன்போது படகின் உரிமையாளர்கள் உரிய ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் முன்னிலையாகாத காரணத்தால் குறித்த ஆறு மீன் பிடி படகுகள் அரசுடமையாக்கப்படுவதாக நீதிபதி உத்திரவிட்டார்.  இதேவேளை தங்கச்சிமடம் மற்றும் இராமேஸ்வரத்தை சேர்ந்த இரண்டு படகுகளுக்கான விசாரணையின் போது உரிய ஆவணங்களை உரிமையாளர்கள், நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளநிலையில் அவை குறித்து ஆய்வு செய்வதற்காக வழக்கின் தீர்ப்பை வரும் 14ம் திகதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More