Home இலங்கை வலி வடக்கில் 227 ஏக்கர் காணியை அபகரிக்க அரசாங்கம் நடவடிக்கை…

வலி வடக்கில் 227 ஏக்கர் காணியை அபகரிக்க அரசாங்கம் நடவடிக்கை…

by admin


வலிகாமம் வடக்கில் 227 ஏக்கர் காணிகளை அபகரிப்பதற்கு அரசாங்கம் இரகசிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காணிகளை அபகரிப்பதற்குரிய கடிதங்கள் நேற்று வியாழக்கிழமை காணிகளின் உரிமையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையிலையே இந்த விவகாரம் குறித்து தெரிய வந்துள்ளது.

காணிகளை அபகரித்து கடற்படை முகாம், சுற்றுலாத்தலம் அமைப்பதற்காக அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள காணிகளின் உரிமையாளர்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வலிகாமம் வடக்கு பிரதேசத்தின் காங்கேசன்துறை மத்தி மற்றும் நகுலேஸ்வர கிராம சேவகர் பகுதிகளை உள்ளடக்கியதாக 227 ஏக்கர் காணியே இவ்வாறு அபகரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தெல்லிப்பழை பிரதேச செயலாளர் அண்மையில் கொழும்பிற்கு அழைக்கப்பட்டு, இந்த விடயம் தொடர்பாக ஆராயப்பட்டதாகவும் இந்த நடவடிக்கை இரகசியமான முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் இந்தக் காணிசுவீகரிப்பு தொடர்பில் எதிர்ப்பினை வெளியிட்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வடக்கு ஆளுநர் மற்றும் பிரதமருடன் இது தொடர்பாக கலந்இந்நடவடிக்கையின் உடனடியாக தடுத்து நிறுத்துமாறு கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More