Home இலங்கை பொகவந்தலாவயில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவியின் சடலம் மீட்பு

பொகவந்தலாவயில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவியின் சடலம் மீட்பு

by admin


பொகவந்தலாவ டின்சின் தோட்ட பகுதியில் உள்ள தொழிற்சாலை கொலனி பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்கு வெளி பகுதியில் கால்கள் இரண்டும் கட்டபட்ட நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில் பாடசாலை மாணவி ஒருவரின் சடலம் இன்று (08.03.2019 ) காலை மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ காவல்துறையினர் தெரிவித்தனர்

மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்ட அவரின் சகோதரி கூச்சலிட்டதையடுத்து பொகவந்தலாவ காவல்துறையினருக்கு அறிவிக்கபட்டதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மாணவியின் கால்கள் இரண்டும் கட்டபட்ட நிலையில் அவரது வீட்டின் வெளி பகுதிக் கூரையில் தாயின் சேலையால் தூக்கில் தொங்கியவாறு இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் பொகவந்தலாவ டின்சின் தமிழ் மகா வித்தியாலத்தில் உயர் தரத்தில் கலை பிரிவில் கல்வி கற்ற 18 வயதுடைய முத்துமணி பிரியவர்ஸினி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவியின் மரணம் தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ள காவல்துறையினர் சம்பவ இடத்திற்;கு கைரேகை பிரிவினர் மற்றும் அட்டன் நீதிமன்ற நீதவான் வரவழைக்கப்பட்டு விசாரணைகளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

(க.கிஷாந்தன்)

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More