Home இலங்கை ஒருபோதும் சர்வதேச நீதிபதிகளை அரசு அனுமதிக்காது :

ஒருபோதும் சர்வதேச நீதிபதிகளை அரசு அனுமதிக்காது :

by admin

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை விசாரணை செய்வதற்காக ஒருபோதும் சர்வதேச நீதிபதிகளை அரசு அனுமதிக்காது என தெரிவித்துள்ள சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல 2015ஆம் ஆண்டு, இலங்கையால் இணை அனுசரணை வழங்கப்பட்ட தீர்மானத்தில் திருத்தம் செய்வது குறித்து மாத்திரம் சர்வதேச சமூகத்துடன் பேச்சு நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற அமர்வில் வாய்மொழி மூலமான கேள்விக்கு பதில் வழங்கியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்துடன் 2015 ஆம் ஆண்டு ஆட்சிமாற்றம் ஏற்பட்டதன் பின்னர் இலங்கைக்கும் சர்வதேச சமூகத்திற்கும் இடையிலான உறவு சுமூகமாக நகர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று உள்நாட்டு நீதிமன்ற கட்டமைப்பு குறித்து கதைப்பவர்கள்தான் அன்று பிரதம நீதியரசரை 24 மணி நேரத்துக்குள் பலவந்தமாக வீட்டுக்கு அனுப்பியதாகவும் இராணுவத்தினருக்காக தற்பொழுது அதிக கரிசனைக் காட்டுபவர்கள் அன்று இராணுவத் தளபதியாக இருந்த சரத்பொன்சேகாவை இழுத்துச்சென்று சிறையில் அடைத்தததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, இலங்கைக்கு சாதகமாக்கிக்கொள்ள அதில் திருத்தங்களை செய்வது குறித்து சர்வதேச சமூகத்துடன் பேச்சு நடத்தப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More