Home இலங்கை சிவாஜிலிங்கம் – அனந்தி உள்ளிட்டோரால் ஜெனிவாவில் சமர்ப்பிக்க வேண்டிய கோரிக்கைகள் ஆளுனரிடம் சமர்ப்பிப்பு

சிவாஜிலிங்கம் – அனந்தி உள்ளிட்டோரால் ஜெனிவாவில் சமர்ப்பிக்க வேண்டிய கோரிக்கைகள் ஆளுனரிடம் சமர்ப்பிப்பு

by admin

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் கடந்தமாதம் ஆரம்பமாகியுள்ளதுடன் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் கலந்து கொள்வதற்காக வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளமை நிலையில் வடமாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சமய தலைவர்கள் ஆகியோர் ஜெனிவாவில் இடம்பெறும் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் வட மாகாணம் சார்ந்து முன்வைக்க வேண்டியதென கருதும் தமது கோரிக்கைகளை தன்னிடம் எழுத்துமூலம் சமர்ப்பிக்கலாமென ஆளுநர் அறிவித்துள்ளார்.

இதற்கான கடிதம் மேற்குறிப்பிட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு நேற்று (08) அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் தமது கோரிக்கைகளினை ஆளுநர் செயலகத்தில் சமர்ப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பொதுமக்கள் தமது கோரிக்கைகளினை எதிர்வரும் 13ஆம் திகதி கைதடி முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெறும் மக்கள் சந்திப்பில் இதற்கென விசேடமாக ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் கையளிக்க முடியும்.

மேலும் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன் உள்ளிட்டோர் ஜெனிவாவில் சமர்ப்பிக்க வேண்டியதென கருதும் தமது கோரிக்கைகளை இன்று (09) முற்பகல் ஆளுநர் அலுவலகத்தில் சமர்ப்பித்திருந்தனர்.

ஆளுநரின் தனிப்பட்ட செயலாளர் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் ஆகியோர் இந்த கோரிக்கை கடிதத்தை ஆளுநர் சார்பாக பெற்றுக் கொண்டிருந்தனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More