Home இலங்கை கடும் குளிர் காரணமாக சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்றவர் மரணம்

கடும் குளிர் காரணமாக சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்றவர் மரணம்

by admin


கடும் குளிர் காரணமாக சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்ற யாத்திரிகர் ஒருவர் சிவப்பு அம்பளம் பகுதியில் இன்று (11) அதிகாலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதுளை, கெந்தகொல்ல பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய ஜே.எம். தர்மகீர்த்தி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடும் குளிர் காரணமாக நெஞ்சு வலி ஏற்பட்டதனையடுத்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு முயற்சித்துள்ள நிலையில்p அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது சடலம் வைத்திய பரிசோதனைக்காக மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக மலையகத்தில் சில பகுதிகளில் பல்வேறு இடங்களில் கடும் வரட்சியுடன் கடும் குளிர் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More