Home இலங்கை புலிகளின் ஆயுதங்களை பாதாள உலகக் குழுவிற்கு விற்க முயன்றவர்கள் கைது..

புலிகளின் ஆயுதங்களை பாதாள உலகக் குழுவிற்கு விற்க முயன்றவர்கள் கைது..

by admin

தமிழீழ விடுதலைப் புலிகள் செயற்பட்ட காலப்பகுதியில், வடக்கில் புதைத்த ஆயுதங்களை மீள தோண்டி எடுத்து அவற்றை தெற்கின் பாதாள உலக குழுக்களுக்கு விற்பனை செய்யும் சட்ட விரோத நடவடிக்கைகளை திட்டமிட்டு முன்னெடுத்ததாக தெரிவித்து 12 சந்தேக நபர்களை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த பூசகர் ஒருவர் உட்பட விடுதலை புலிகள் இயக்கத்துடன் தொடர்புபட்டிருந்த 5 பேரும் தெற்கின் பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7 பேருமே இவ்வாறு கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

புலனாய்வுத்துறையினர் காவற்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு வழங்கிய புலனாய்வு அறிக்கையை மையப்படுத்தி, காவற்துறைமா அதிபரின் உத்தரவின் பேரில் மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More