Home இலங்கை காவல்துறையினருக்கு குற்றங்களில் ஈடுபடுபவர்களுடன் தொடர்பு

காவல்துறையினருக்கு குற்றங்களில் ஈடுபடுபவர்களுடன் தொடர்பு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

குற்றம் தொடர்பில் காவல்துறையினருக்கு தகவல் வழங்கினால் அந்த குற்றம் தடுக்கப்படுகிறதோ இல்லையோ, காவல்துறையினருக்கு தகவல் வழங்கிய நபரை குற்றவாளியே தொலைபேசியில் தொடர்பு கொண்டு எச்சரிக்கை செய்யும் அளவிற்கு யாழ். காவல்துறையினருடைய நம்பகத்தன்மை உள்ளது என ஈ.பி.டி.பி கட்சியின் யாழ்.மாநகர சபை உறுப்பினரும் பிரபல சட்டத்தரணியுமான மு.ரெமிடியஸ் யாழ். காவல்துறையினர் தொடர்பில் வெளிப்படையாக குற்றம் சுமத்தியுள்ளார்.

யாழ்.மாநகர சபையின் அமர்வு நேற்று செவ்வாய் கிழமை காலை நடைபெற்றது. அமர்வின் போது குற்றங்களை தடுக்க விசேட காவல்துறை காவலரண் அமைப்பது தொடர்பில் சபையில் பேசப்பட்ட போதே மேற்கண்டவாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்:-

யாழ்.கரையோரப் பகுதியில் அளவுக்கு அதிகமாக நடைபெறும் மணல் அகழ்வு தொடர்பில் காவல்துறையினருக்கு தகவல் வழங்கினால் அத்தகவல் தொடர்பில் காவல்துறையினருக்கு இரகசியம் பேனுவதும் இல்லை, அக் குற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுப்பதிலும் மந்த நிலையை கடைப்பிடிக்கின்றார்கள்.

குறிப்பாக அண்மையில் யாழ்ப்பாணத்தில் மணல் கடத்தல் தொடர்பில் காவல்துறையினருக்கு தகவல் வழங்கிய நபர் ஒருவருக்கு அந்த மணல் கடத்தலில் ஈடுபட்டவரே தொலைபேசியில் அழைத்து அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது .

எனவே காவல்துறையினருக்கு குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கும் தொடர்பு உள்ளது என்பது வெளிப்படையாக தெரிகிறது என தெரிவித்தார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More